காதல்..
சுகமான வலி !
கசப்பான தேன் !
அதனால்
தினம் தினம் மரணம்!
தினம் தினம் ஜனனம்!
காதல் வந்தால் பசி மறந்துபோகும் !
கனவே வாழ்வாகும்!
ஆயிரம் நட்சத்திரங்கள் சுற்றி இருந்தாலும்
தான் மட்டும் தனித்துவிடப்பட்டதாய் உணருவாள் நிலா!
பாலைவனத்ததில் நீரைக்கண்டதுபோல்
துள்ளித் துள்ளி குதிக்கும் அவளின் மனம்!
உன் கைதொலைபேசி எப்பொழுதும் சினுங்குவதாய்
உனக்குள்ளே பிரம்மை தோன்றும்!
தலையணை தோழியாகும்!
கண்ணாடி கவிதை பேசும்!
இரவு உரைந்துபோகும்!
உறக்கம் இறந்து போகும்!
உன் பெயர் நினைவிழந்து
உன்னவர் பெயர் மந்திரமாகும்!
கண்ணீர் அனுமதி கேட்காது!
புன்னகை தனிமையென பார்க்காது!
உன் சித்தம் தொலைத்து, பித்தம் நிறைந்து
நித்தம் கரைவாய் ! மொத்தம் தொலைவாய்!
நான் என்பது நான் அல்ல
நீ என்பது நீ அல்ல
என உண்மை உணர்ந்து நாமில் கரைவாய்! ஊணில் உறைவாய்!
வாழ்வின் அர்த்தம் விளங்கப்பெறுவாய்!
ஆம்.
காதல்..
சுகமான வலி!
கசப்பான தேன் !
No comments:
Post a Comment