பெண்!
குழந்தையாய் இருக்கும்பொழுது எல்லா குழந்தைக்குமே பெண் குரல்தான்..
அதனால்தான் எல்லா மழலையுமே தேனாய் இனிக்கிறது..
பெண்!
குழந்தையாய் தொட்டிலில் துயிலும்பொழுது
தாயை நினைவுப்படுத்துவாள்..
தோளிலே தூங்கும்பொழுது
பாசத்தை கற்றுக்கொடுப்பாள்..
தோழியாய் நெருங்கும்பொழுது
நம்பிக்கையை நெஞ்சில் விதைப்பாள்..
காதலாய் கனியும்பொழுது
வாழ்க்கையில் அர்த்தம் கொடுப்பாள்..
மனைவியாய் படறும்பொழுது
மெழுகாய் உருகி வெளிச்சம் ஏற்றுவாள்..
தாய்மையில் நிரம்பும்பொழுது
தெய்வத்தை புவியில் காண்பிப்பாள்..
தங்கையாய், அத்தையாய், மகளாய், மருமகளாய்...
ஒவ்வொரு வீட்டிலும் பெண்..
இந்த உலகத்தின் கண்..
குழந்தையாய் இருக்கும்பொழுது எல்லா குழந்தைக்குமே பெண் குரல்தான்..
அதனால்தான் எல்லா மழலையுமே தேனாய் இனிக்கிறது..
பெண்!
குழந்தையாய் தொட்டிலில் துயிலும்பொழுது
தாயை நினைவுப்படுத்துவாள்..
தோளிலே தூங்கும்பொழுது
பாசத்தை கற்றுக்கொடுப்பாள்..
தோழியாய் நெருங்கும்பொழுது
நம்பிக்கையை நெஞ்சில் விதைப்பாள்..
காதலாய் கனியும்பொழுது
வாழ்க்கையில் அர்த்தம் கொடுப்பாள்..
மனைவியாய் படறும்பொழுது
மெழுகாய் உருகி வெளிச்சம் ஏற்றுவாள்..
தாய்மையில் நிரம்பும்பொழுது
தெய்வத்தை புவியில் காண்பிப்பாள்..
தங்கையாய், அத்தையாய், மகளாய், மருமகளாய்...
ஒவ்வொரு வீட்டிலும் பெண்..
இந்த உலகத்தின் கண்..
மிகவும் அழகான பெண்மை வரிகள் ....
ReplyDeleteகவிதை இனிமையான வரிகளில் உள்ளதை படிக்கும் பொது உணர்ந்தேன் அன்பு தோழி