Monday, September 28, 2009

உனக்காக சிலுவை சுமப்பதில் எனக்கு பேரின்பமே!!

நீ வெய்யிலில் நடக்கும்பொழுது நான் நிழலாய் ஆகின்றேன்..
சூரியன் என்னையும் சுட்டெரிப்பதை மறந்து…
நீ பசியில் வாடாமல் என்னையே உனக்கு உணவாக்கி மகிழ்கின்றேன்..
என் உடல் சோர்வடைவதையும் மறந்து…
இயற்கையை உனக்கு பதிலாய் என்னை துன்புறுத்த கட்டளையிடுகின்றேன்..
இவையெல்லாம் என்னை சிறிதும்
காயப்படுத்தாது .. என்னும் ரகசியம் உணர்ந்து...
ஆம் ..
எனக்கு உண்மையான வலி உன் காயத்தில் மட்டும்தானே…

-->*-அம்மா-*

No comments:

Post a Comment